Thursday, February 16, 2012

யாழ். மண்ணில் தமிழர் பாரம்பரியக்கலை

0 comments
ஆடிலரசிடம் நடனம் கற்று மேடையேறிய எனது அனுபவம்…
சமூகத்தில் புதிய மாற்றத்தை தந்திருக்கின்றது. குறுகிய காலத்தில் நாம் கலந்து இவ்வாற்றுகை அரங்கேறியதென்பது சிறந் அனுபவம்.; இப்பறையின் மூலம் பறைசார்ந்த தாளக்கட்டுக்கள்இ பலவகையான ஆட்டங்கள், குழுவாகச்செயற்படும் தன்மை போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன் என்கின்றார். இதைவிட மேலும் ஆயிரம் ஏக்கர் உள்ள நிலப்பரப்பில் ஒரு புதையலைக்கண்டு எடுக்கும் விவசாயியின் மகிழ்ச்சிக்கு ஒப்பானது.


பர்வையாளரின் கைகளில் இருந்து வந்துபோன கரகோசத்தில் இருந்து இந்த மகிழ்கச்சியை நாம் பெற்றுக்கொண்டோம் இந்தியப்பயணத்தில் இந்தக்கலையினைப்பார்த்து இதைக்கற்றுக்கொள்ளமுடியுமா? என ஏங்கிய எமக்கு இன்று இந்த வாய்ப்புக்கிடைத்தது ஒரு பெரிய அரியவாய்ப்பே என்கின்றார் மரீன்தர்மிலா. இந்தக்கலையை கற்கும்போது எமக்குள் அத்தாளம் பதிந்து விட்டது இதில் உள்ள ஒவ்வொரு ஆட்டமும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றே எனவும் கூறுகிறார்
                  இந்திய சுற்றுப்பயணத்தில் வெறும் பார்வையாளராக இருந்த என்னை குரு வேணு இன்று என்னை ஆடவைத்துள்ளார். ஊடக மாணவர்களுக்கு இக்கற்கையை கற்பதென்பது ஒரு வரப்பிரசாதமாகும். சக மாணவர்களுடன் ஆடும்போது அவர்களுடைய அசைவையும் கவனித்து ஆடவேண்டும் இதன்போது தொடர்பாடலும் விருத்தியடைந்தள்ளது
நீண்டகாலமாக வாழ்வியலோடு சம்மந்தப்பட்ட கிராமியக்கலை யாழ் மண்ணில் இல்லாமல் அழிந்து போய்விட்டது இப்போது ஆடல் அரசு எங்கட யாழ்ப்பாணத்தில் இதைப்பழக்கி ஆடவைத்துள்ளார் என்கிறார் இந்து. இப்போ யாழ்ப்பாணத்தில் பல்வேறு நவீனத்தவங்கள் நிகழ்ந்து வருகின்ற வேளையிலே இந்தக்கலையை நாம் கற்று ஆடுவதென்பது மிகவும் சிறப்பான ஒன்றே. என்னதான் சினிமாவில் பல்வேறு ஆட்டங்கள் கூத்துக்களை பார்த்தாலும் நாம் பயின்ற இந்தக்கலையானது புனிதமானதாகவும் தமிழரின் பாரம்பரியத்தை எடுத்து விளக்குவதாகவும் அமைந்துள்ளது என்கின்றார்.மேலும் நாம் பார்வையாளருக்கும் அந்த பார்வைளாளர் கண்களுக்கும் சிறந்த விருந்து கொடுத்திருப்பதையே இதனை ஆடிமுடித்தவுடன் எனக்கு தோன்றுகின்றது
பழகும்போது பயம்தொரியவில்லை அரங்கேறப்போகின்றோம் என்பதும் ஒருவித பயம் அரங்கேறியதும் அந்தப்பயம் எல்லாம் பறந்து விடுகின்றது. நிறையக்கூத்துக்களையும் ஆடல்களையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம் ஆனால் இப்போது நேரில் அதைப்பயின்று ஆடும்போது எங்களுக்குரிய வெட்கம் பயம் எல்லாம் இல்லாது போய்விட்டது.
இந்தியாவில் பார்க்கும்போது இந்தக்கலையை எப்படி ஆடுவது என ஏங்கினேன் ஆனால் அதை வேணுஅண்ணா இலகுவாக ஆடுவதற்கு பயிற்றுவித்தார்.. ஆடலும் மேடையில் அரங்கேறும்போது பார்வையாளர் முன்னால் இருக்கும்போது எனக்குள்ளேயே நான் நன்றாக ஆடவேண்டும் என உற்சாகம் தோன்றுகின்றது எனவும் கூறுகின்றார்.
கற்றது சிறுதுளி கல்லாதது கடல்அளவு இருக்கு அதேபோல்தான் நானும் இக்கலையை கற்றுள்ளேன். முல்தடவையாக நானும் பழகணும் என்ற எண்ணம் இருந்தது அது இப்போநிறைவேறிடிச்சு இக்கலை தொடர்ந்து நிலைத்திருக்கணும் என்று ஆசை இருக்கு ஆனால் அது தொடர்ந்தும் நிலைக்காது.
ஏனென்றால் நான் இப்போ அநனயை கநைடன இல் கரடட வiஅந மாணவனாக கற்றுக்கொண்டிருக்கின்றேன் ஆதலால் அதிலேயே முழுக்கவனமும் செலுத்தவேண்டியுள்ளது எனவும் கூறுகின்றார். யாழ்ப்பாணத்தில் இதைப்பற்றி எல்லோருக்குமு; தெரியாது அதனை ஊடக மாணவர்களாகிய எம்மூலம் எல்லா இடங்களுக்கும் அறிமுகப்படுத்தவேண்டும். இந்தக்கலையினை கற்றதுடன் மற்றவர்களுக்கும் நானே சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள்ளே ஏற்பட்டுள்ளது..இது ஆரம்பத்தில் பழகும்போது கடினமாக இருந்தது பின்பு இது இலகுவாக மாறிவிட்டது.
மேலும் பறையாட்டம் என்பது பார்வையாளர்களுக்கு இலகுவானதொன்றாகும் ஆனால் அதனை செயலில் ஈடுபடுத்துவதென்பது மிகவும் கஸ்ரம் ஏனெனில் எல்லோருக்கும் கையும் காலும் சேர்ந்து வேலை செய்வது கடினம் அதை எங்களுக்கு எளிதான முறையில் முதலில் காலாட்டம் பின்பு கையில் பறையடித்துப்பழகுதல் பின்பு இரண்டையும் சேர்த்து செய்வது என படிமுறையாகப்பழகியது இலகுவாக இருந்தது. அத்துடன்; இந்தக்கலையானது தொடர்ந்தும் வளரவேண்டும் இதனை நாம் தொடர்ந்து செய்யவேண்டும் இத்துடன் இது முடிவடையக்கூடாது.

ஆக்கம் - இந்து.வே

Leave a Reply