விருத்தி செய்துகொள்வதை நோக்கமாக கொண்டு இவ் உள்ளகப்பயிற்சி அமைந்தது 2010- 2012களில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் இதழியல் டிப்ளோமா பயிற்சி கட்டமைவுகள் போன்;றவற்றிற்கு இணங்க ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் நான்காம் அணி மாணவர்களின் உள்ளகப்பயிற்சி -1 இற்கான விஜயம் 06.09.2011 – 14.09.2011 வரை கொழும்பில் இடம்பெற்றிருந்தது.
அதில் எமது பாடத்திட்டத்திற்கு இணங்க பல ஊடக நிறுவனங்களுக்கு சென்று மாணவர்கள் ஊடக நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அறிந்து கொள்வதனையும் மாணவர்கள் தமது ஆளுமையினை திருந்தது. இதன்மூலம் பல செயற்பாடுகளைநேரடியாகப்பார்வையிட்டு எமது ஊடக அறிவை ...
Thursday, February 16, 2012
உணர்வைத்தந்த உயிரோட்டங்கள்
17.10.2011 யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தினால் இந்தியா செல்வதற்கு விமானத்தில் பயணித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. தள்ளு வண்டியில் பைகளை தள்ளிக் கொண்டு போனதும் முதல் தடவையாக இருந்தன. விமான நிலையத்தில் பொதியை சோதனை செய்து பின் படிவத்தை நிரப்பி போனது எனக்க புது அனுபவமாக இருந்தன. எனக்கு நகரும் படிக்கட்டில் ஏறி பழக்கமில்லை. இது தான் முதல் தடவையாக இருந்தன. நகரும் படிக்கட்டிலும் ஏறிவிட்டேன். இது எனக்கு மறக்க முடியாத சம்பவமாக இருந்த விமான நிலையத்தில்; வெளியில் நிற்கும் விமானத்தைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. விமானத்தை நேரில் பார்ப்பேன் என நினைக்கவில்லை. ...
மரத்தளபாட உற்பத்தி…..
தற்போது நாகரிகத்தின் காரனமாக மக்கள் அதிகளவு மரத்தளபாடத்தினைகொள்வனவு செய்கின்றனர். ,இதனால் உற்பத்தி அதிகமாகின்றது. ,இதன்விளைவாக மரங்கள் அதிகளவு அழிக்கப்படுகின்றது. ,இதனால் மழைவீழ்ச்சி குறைவடைகின்றது. ,இதனை மக்கள் அறிந்திருந்தாலும் மக்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. வீடு என்னும் தேவை அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பரவிக்கொண்டே போய் நகரமயமாக்கல் என்ற விசுவரூபம் எடுத்து மனிதர்களைப் பேய்போல கவ்விப் பிடித்து அவர்கள் புறவாழ்விலும் எத்தனை எத்தனை ...
யாழ். மண்ணில் தமிழர் பாரம்பரியக்கலை
ஆடிலரசிடம் நடனம் கற்று மேடையேறிய எனது அனுபவம்…
சமூகத்தில் புதிய மாற்றத்தை தந்திருக்கின்றது. குறுகிய காலத்தில் நாம் கலந்து இவ்வாற்றுகை அரங்கேறியதென்பது சிறந் அனுபவம்.; இப்பறையின் மூலம் பறைசார்ந்த தாளக்கட்டுக்கள்இ பலவகையான ஆட்டங்கள், குழுவாகச்செயற்படும் தன்மை போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன் என்கின்றார். இதைவிட மேலும் ஆயிரம் ஏக்கர் உள்ள நிலப்பரப்பில் ஒரு புதையலைக்கண்டு எடுக்கும் விவசாயியின் மகிழ்ச்சிக்கு ஒப்பானது.
பர்வையாளரின் கைகளில் இருந்து வந்துபோன ...
கற்றுகற்றுக்கொண்ட பாடங்களும் உணர்வுகளும்
ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முழுநேர கற்கை நெறியினை கற்கும் மாணவர்கள் அனைவரும் உள்ளகப்பயிற்சி ஒன்றினை மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் படி 06/09/2011அன்று ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிமைய நிலையத்தில் 4.00 மணிக்கு அனைவரும் கூடி எமது ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவாக உள்ளதா என்று சரிபார்த்து விட்டு இரவு 8.00 மணிக்கு பயணத்தினை உற்சாகத்துடன் ஆரம்பித்தோம்.
ஆரம்பமே புது உணர்வினை கொடுத்தது. நண்பர்களுடன் ...
அரங்கேறிய நாட்டார் கலை

நாகரீக போர்வையில் பண்டையகலைகள் பல அரிகிய வண்ணமே உள்ளது. அதில் ஒன்றான நாட்டார் கலையின் ஆற்றுகை பல காலங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்டது. இதனை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிமையமும் செயற்திறன் அரங்க இயக்கமும் இணைந்து தென்னிந்திய நாட்டார் கலைகளை ஆற்றுகைப்படுத்தியது.
இதனை சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறை முதுகலை மாணவனும் முற்றம் கலைக் குழுவின் செயலாளருமான ஆடலரசு வேணுகோபால் அவர்களது சிறப்பான பயிற்றுதலின் ...
தமிழனுக்கு விசை கொடுத்த தப்பு இசை

வேலை செய்த களைப்பை மறக்கும் கருவியாக அந்தக்கால மக்கள் ஆடல்பாடல்களை நம்பினர்;. அந்தக் காலத்திலெல்லாம் வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று பொழுதுபோக்கு கருவிகள் இருந்ததில்லை. கடின உழைப்பும் ஓய்விற்கென கிராமியக்கலைகளுமே அவர்களது மூச்சாக இருந்தது. மகிழ்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட நாட்டார் கலைகள் ஒடுக்கப்பட்ட மக்களிற்கு விசை கொடுக்கும் கருவியாகவும் செயற்பட்டு வந்தது. அதிலே தப்பு இசையினை ஒடுக்கப்பட்ட மக்கள் தம்முடைய குரலாக, சக்தியாக உலகிற்கு வெளிக்கொணர்ந்தனர். ...
சொந்த வாழ்வுக்கு திரும்பியுள்ள மக்கள்
21 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடங்களுக்கு தெல்லிப்பளை, மாவிட்டபுர மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுள் தெல்லிப்பளை J/230 பிரிவை கிராமசேவகர் பிரிவாகக் கொண்ட செல்வாபுரத்துக்கு சென்றிருந்தோம்.
அங்கு இப்பிரதேசவாசியான க.வரதராஜா அவர்களைச் சந்தித்து இக் கிராமத்தினைப் பற்றிக் கேட்ட போது, அவர் தற்போது மக்கள் வந்து குடியேறத் தொடங்கி 5 மாதங்கள் கடந்துள்ளன. நாம் பொருட்கள் வாங்குவதற்கான கடைகள் போதுமானதாக இல்லை நீண்ட தூரத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. ...
பாரம்பாரியத்தின் உணர்ச்சி

பாரம்பாரியத்தை கட்டி காப்பது தமிழனின் மரபுரிமைப் பண்பு . அவ்வகையில் இக்கலையினை கற்று கொண்ட வீரர்களின் அனுபவத்திலிருந்து இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது. சமூகத்தில் இவ்வாற்றுகையானது ஒரு புதிய தேடலை தந்திருக்கின்றது. குறுகிய காலப்பகுதியில் நாம் கலந்து இவ்வாற்றுகை அரங்கேறியதென்பது “ஒரு எல்லையிலே நிற்கின்ற இராணுவ வீரனை விரட்டியடித்து அந்த இடத்தினை கைப்பற்றியபோது ஒரு போராளிக்கு இருக்கும் மகிழ்ச்சியை கொடுப்படுபோல் எனக்கும் இவ்வாறு மகிழ்ச்சியை தந்தது” ...
புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் மீள்குடியேற்றத்திற்காக அகற்றப்பட்டு வருகின்றன
.jpg)
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப்பிரிவில் தெல்லிப்பழைப்பிரதேசம் செயலாளர் பிரிவில் மாவிட்டபுரம், வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும் தெற்கில் மல்லாகம், ஏழாலை என்னும் ஊர்களும், மேற்கில் அளவெட்டி, பன்னாலை போன்ற ஊரும் உள்ளன, காங்கேசன்துறை வீதி இவ்வூரான வீமன்காhம் ஊடாகச்செல்கின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 8 மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை பிரதேசத்தில் யுத்த காலத்தில் புதைக்;கப்பட்ட கண்ணி வெடிகள் மீள்குடியேற்றத்திற்காக ...
நாகர் கோவில் மீள் குடியேற்றம் ஓரு பார்வை

வடமாரட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தன் ஒரு பகுதி தற்பொழுது முழுமையாக கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளானர். J/424 கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசமே இவ்வாறு கண்ணி வெடி அகற்றப்பட்டு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளது.
இப்பிரதேசம் 1995ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் அகற்றப்பட்டு இடம்பெயர்க்கப்பட்டமையாகும். இவ்வாறு இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் வன்னி மற்றும் யாழ் மாவட்ட ஏனைய பிரதேசங்களில் வசித்து வந்தானர். யுhழ்ப்பாணம் ...
உலர் உணவுப்பொருள் நிறுத்தப்பட்டதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வன்னியில் இருந்து இடம்பெயர்த மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலருணவுப்பொருட்களானவை தற்பொழுது அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சொந்த இடங்களுக்கும் திரும்ப முடியாத நிலையில் உணவுக்காகத்திண்டாடும் மக்கள் சிலரின் கருத்துக்கள் இங்கு பிரசுரமாகின்றது.
வடிவேலு புஸ்பமலர் (வயது-46)
நாங்கள் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியேறியுள்ளோம். கணவர் மனநோயினால் பாதிக்கப்பட்;டவர் எனக்கு ஏழு பிள்ளைகள் அதில் இருபிள்ளைகள் திருமணம்முடித்து விட்டனர் ஒரு மகன் முள்ளிவாக்காலில் காணாமல் போய்விட்டார் ...
பண்பாட்டு மண்ணில் பாரம்பரிய கலை

ஈழத்தில் பொதுவாக பாரம்பரிய கலைகள் மருவி வருகின்ற சுழ்நிலையில் யாழ் மண்ணில் தமிழர் தம் வாழ்வியலை பிரதிபலிக்கின்ற கலைவடிவங்களை இன்றைய இளம் சமுகம் மத்தியில் தெரியப்படுத்தும் நோக்கில் தென்னிந்தியாவின் ஆதித்தமிழர் இயக்கத்தின் கலைத்தலைவர் ஆடல் அரசு என்றழைக்கப்படுகின்ற வேணு அவர்கள் யாழ் மண்ணில் நிகழ்த்திய ஆற்றுகை எம் பாரம்பரிய கலைகளுக்கு மேலும் புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையமும் செயற்திறன் அரங்க ...
மரக்கறிச்சந்தை
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளுள் பெரிய சந்தையாக விளங்குவதே திருநெல்வேலி சந்தையாகும் .இங்கு ஒவ்வொரு நாளும் அதிகமான மக்கள் வந்து மரக்கறி கொள்வனவு செய்வதைக் காணக்கூடியதாக உள்ளது.அதிகாலையிலே இச்சந்தை கூடி விடுவது வழைமயானது. அன்று காலை 9.00 மணியளவில் அச் சந்தையில் மரக்கறிக் கொள்வனவில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட படங்கள்.
ஆக்கம் - புவித ...
கண்ணில் வழியும் வேதனை
வலிகளோடு ஏக்கங்களை சுமந்தபடி இருக்கின்றது மீள்குடியேறிய மக்கள் விழிகள்! சோந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததால் அப்பா என்ற ஒரு ஆறுதல். வேதனைகளை நெஞ்சுக்குள் மறைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள்.
நாகர்கோவில் மேற்குப் பிரதேச மக்கள் கடந்த வருடம் யூலை மாதம் தம் சொந்த இடம் திரும்பியிருக்கின்றார்கள். அவ்விடத்திற்கு களப்பயிற்சிக்காக சென்ற போது ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன்.
சந்தியோ சூரியமதி! முப்பது வயதேயான குடும்பப் பெண். விழிகளில் ...
என் பயண அனுபவம் தந்த சுகமும் துக்கமும்…

கடந்த மாதம் தென்னிந்தியாவிற்கு ஊடகப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தோம். ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயணம் ஊடக அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்டதாகும். ஓவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு அனுபவத்தை சொல்லிக் கொண்டே இருக்கும் ...
கொழும்பில் ஊடகப் பயிற்சிப் பயணம்

அனுபவங்கள் தான் மனிதனை செம்மையாக்குகின்றது. எம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் எம்மை தூக்கி நிறுத்துகின்றன. வெற்றி தோல்வியை சமதளத்தில் வைத்து எம்மையே பூர்த்தி செய்ய வைக்கின்றது.நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் முழுநேர இதழியல் கற்கைநெறி பயிலும் மாணவி. பரீட்சை முடிந்தவுடனேயே எமக்கான உள்ளகப் பயிற்சிப் பயணம் கொழும்பை நோக்கி ஆரம்பித்தத ...
Wednesday, February 15, 2012
மறக்கமுடியாத இந்தியப்பயணம்

எமது ஊடகப்பயணமானது இரண்டாவது தடவையாக தமிழ்நாட்டுப்பயணம். இந்த ஊடகப்பயணத்தில் இந்தியா சென்று யாழ்ப்பாணம் வரும் வரை பல அனுபவங்கள் தோன்றியுள்ளது. கொழும்புப்பயணத்தின் அனுபவப்பகிர்வு யாழ்ப்பாணம் வந்தும் மறப்பதற்கு ஒரு வாரம் சென்றது. இது தமிழகப்பயணமல்லவா? அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? யாழில் இருந்து கொழும்பு செல்லும் போது சாதரணமாக இருந்தது. ஆனால் 12.30 மணியளவில் விமான நிலையத்தில் இறங்கி இருந்த இடங்களில் சின்னத்தூக்கம் போட்டது இன்றும் மறக்கமுடியாதது ...
கொழும்பு அனுபவம்

ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் இருந்து 06.09.2011 இரவு 07.30மணிக்கு ஆரம்பித்த எம் பயணம் மறு நாள் காலை 06.30ற்கு கொழும்புத்தழிழ்ச்சங்கத்தை அடையும் வரை தொடர்ந்தது. பயணத்தின் அன்றைய இரவு முழுவதும் எமது சக மாணவர்களுடன் சந்தோசமாக கழிந்தது. மறு நாள் காலையில் 06.30 மணிக்கு கொழும்புத்தழிழ்ச்சங்கத்தை சென்றடைந்தோம்.
ஒரு மணித்தியாலங்களில் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் உடனடியாக தயாராகுமாறு பணிக்கப்பட்டோம். குளிக்கச் ...
மீளாத நிலையில் மீள்குடியேற்றம்
தொலைந்து போன வசந்தங்களை தேடி தெல்லிப்பளை கிராம மக்கள் நகர்வடைந்து கொண்டிருக்கிறார்கள் யாழ்ப்பாணத்திலிருந்து 8 கிலோ மீற்றர் வடக்கே அமைந்துள்ள தெல்லிப்பளை கிராமம் 21 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தின்கட்டுப்பாட்டிலிருந்து இன்று மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர் . 21 வருடற்களாக தாய் நிலத்தின் சுவாசக்காற்றை சுவாசிக்காத மக்கள் அலைகடல் போல் திரண்டு செல்கின்றனர்
இயந்திரப்பறவைகள் போட்ட குண்டுகளால் சிதைந்து போன சிதைந்து போன வீடுகளும் ஓங்கி ...
பழமை வாய்ந்த நகுலேஸ்வரம்
யாழ்ப்பாணத்தில் வடமேற்குத்திசையில் ஏறத்தாழ 15 கிலோமீற்றர் தொலைவில் மாவிட்டபுரம் அமைந்துள்ளது. அங்கே கோயில் கொண்டருளும் ஆலயம் மாவிட்டபுரக்கந்தசுவாமி ஆலயமாகும். இது மா என்றால் குதிரைமுகம் நீங்கிய தலம் என்றும் கி.பி 07ம் நூற்றாண்டில் இந்தியதிசையுக்கிய சற்சன சோழப்பெருமன்னனின் மகள் மாருதப்புரவீகவல்லியின் குதிரைமுகம் நீங்கிய தலமே மாவிட்டபுரம்.
அரச குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து தேடிவந்து தரிசித்தனர் என்பதானாலும், மாருதப்புரவீகவல்லியின் கொடிநோய் ...
சுகாதார சீர்கேட்டில் யாழ் உணவகங்கள்

குடாநாட்டில் தற்போதைய சனத்தொகைக்கு ஏற்ப உணவகங்களின் தேவையும் இருந்து வருகின்றன.தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து பெருமளவிலான மக்கள் குடாநாட்டுக்கு வருகின்றமையினாலும் இங்கு வந்து தங்ககின்றமையினாலும் மக்களுக்கு உணவகங்களின் தேவை முக்கியமானதொன்றாகிவிட்டது. ஆனால் இந்த உணவகங்கள் மக்களின் சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் முன்னிலைப்படுத்துகின்றதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.அத்துடன் இன்றைய உணவகங்களில் வேலை செய்பவர்கள் தேகஆரோக்கியம் உடையவர் ...
21 ஆண்டுகளின் பின் சொந்த மண்ணில்.
யாழ்ப்பாணம் வலிவடக்கு பிரதேசத்தில், தெல்லிப்பழை உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த கொல்லங்கலட்டி பிரதேசத்தில் இருந்து 1990இல் இடம் பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் 2011 ஆவணிமாதம் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போழுது குறைந்தளவான மக்களே அடிப்படை வசதிகள் ஏதும் அற்ற நிலையில் வசித்து வருகின்றனர். அரசாங்கத்தினால் மீள் குடியமர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் எவ்வித உதவிகளும் இப்பகுதிமக்களுக்கு சரிவர வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
21 ...
Subscribe to:
Posts (Atom)