யாழ்ப்பாணத்துக்கு முதற் தடவையாக வியட்நாம் நாட்டைசேர்ந்த ஊடகவியலாளர்கள் விஐயம் செய்துள்ளனர்.வியட்நாம் நாட்டின் கனோய் என்ற இடத்தில் வியட்நாம் அரசின் தகவல் திணைக்களத்தின் ஊடகப் பயிற்சி நிலையத்திலிருந்து பதினைந்து ஊடகவியலாளர்கள் வந்திருந்தார்கள்.
இவர்கள்
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பயிற்சிகள் செயல்திட்டங்களில் பங்கு கொண்டு பயிற்சி பெறுவதற்காகவும். அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் யாழ்ப்பாணம் வந்திருநததாக வியடநாம் குழுவிற்கு தலைமை தாங்கி வந்துள்ள Tran Thi Khanh Hoa தெரிவித்தார்.
ஓகஸ்ட் 19,20 திகதிகளில் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்துக்கு விஐயம் செய்த இவர்கள் தமது பயிற்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதே வேளை ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் பதிப்பூடக செயற்பாடுகள் ,றேடியோ,ரி.வி செயற்திட்டங்கள் மற்றும் இணைய ஊடகச் செயற்பாடுகள், பயிற்சிகளை பார்வையிட்டும் கேட்டும் அறிந்து கொண்டனர். ஊடக வளங்கள் பயிற்சி மையம் மறுவன்புலோ சகலகலாவள்ளி மாணவர்களுடன் நடத்திய புகைப்படபயிற்சி மற்றும் கண்காட்சி செயற்பாடுகளின் காணொளியை பார்வையிட்டு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இவ்வாறான புதிய வகையான செய்தி சேகரிப்பு பணிகளை தமது பயிற்சிகளிலும் சேர்த்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்குமென்றும் மேலும் தெரிவித்தனர்.
மேலும் ஊடக வளங்கள் பயிற்சி நிலைய மாணவர்களுடன் இணைந்து களநிலை ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.இந்த இணைந்த பயிற்சித்திட்டம் 19/20.09.2012 திகதிகளில் தொடச்சியாக நடைபெற்றன என்று ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் இயக்குனர் தே. தேவானந்த் தெரிவித்துள்ளார்.இந்த பயிற்சி நெறியை சுவீடன் நாட்டின் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நிலையமான போயோ(FOJO) நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட வியட்னாம் ஊடகப்பயிற்சி மையத்தின் இயக்குனர் Tran Thi Khanh Hoa ,